தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 3 November 2014

நோக்கியா என்ற அன்னிய மூலதனக் கம்பெனி (பின்லாந்து ) சுமார் 10000 கோடி வரி எய்ப்பு  செய்துவிட்டு கொள்ளை லாபம் அடித்துவிட்டு பலஆயிரம்  தொழிலாளர்களை  நடுத்தெருவில் 
விட்டது .

இது தான் அன்னிய மூலதனத தின்  லாபவெறி  கொள்கை இதுதான் மோடி அரசின் கொள்கை
இதை  தொழிலாளர்கள்  புரிந்துகொள்ளவெண்டும் 


நோக்கியா ஆலை மூடப்பட்டது


ஸ்ரீபெரும்புதூர், நவ. 1-சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவந்த நோக்கியா செல்போன் உற்பத்தி ஆலை, நவம்பர் 1 சனிக்கிழமை மூடப்பட்டது. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு,2004ல் இந்தியாவில் நோக்கியா நிறுவனம் தனது உற்பத்திப் பிரிவை துவக்க இருப்பதாக அறிவித்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, எப்படியேனும் நோக்கியாவை தமிழகத்திற்கு கொண்டுவருவதில் குறியாக இருந்தார்; பத்து ஆண்டுகளில் கோடி கோடியாக கொள்ளை லாபம் அடித்துவிட்டு அதே நிறுவனம் ஆலையை தற்போதுமூடியுள்ளது.

ஆனால் இப்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையும் வாழ்வும் பறிக்கப்பட்டுள்ள போதிலும் வாய்மூடி மவுனம் காக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக போன்ற ஓரிரு கட்சிகளும், சிஐடியு போன்ற தொழிற்சங்கங்களும் மட்டுமே இத்தொழிலாளர்களுக்காக ஆவேசமாக குரல் கொடுத்தன. தமிழகத்தின் வேறு எந்தக்கட்சியும் இதற்காக கண்டன அறிக்கை கூட விடுக்கவில்லை. ஊடகங்களுக்கு இந்த ஆலை மூடல் ஒரு முக்கிய செய்தியே அல்ல. வேலையைப் பறிப்பது என கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவெடுத்தால் மத்திய,மாநில அரசுகள் ஒருபோதும் தலையிடப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக நோக்கியா ஆலை மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment