தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label ஒப்பந்த ஊழியர். Show all posts
Showing posts with label ஒப்பந்த ஊழியர். Show all posts

Saturday, 26 July 2014

காசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்

புவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும்
காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்
18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின்
ராஜ்கோட் மத்திய  செயற்குழு
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது.
அந்த அடிப்படையில் தற்போது போராட்ட  அறைகூவல்   விடப்பட்டுள்ளது.
26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் 
தர்ணா போராட்டம்
25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி
15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி
பிரச்சனைகள் தீராவிட்டால்
ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் வரும் டிசம்பர் மாதம் நடத்த உள்ளது.

Friday, 17 January 2014

Thursday, 26 December 2013

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை உறுதி செய்வோம்!



ஒப்பந்த ஊழியர்களின் மாத ஊதியம் தொடர்பாக நமது போராட்ட அறைகூவலை அடுத்து நிர்வாகம் நம்முடன் தொடர்பு கொண்டு, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை நிர்வாகமே வழங்குவதாகவும் இது போன்று தாமதம் ஏற்படாதவாறு நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தது. அதன் படி ஊதியமும் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வாயில் கூட்டமாக நடத்தப்பட்டது.
நிர்வாகத்திற்கு நன்றி.

Monday, 7 October 2013

பணி சிறக்க வாழ்த்துகிறோம்!

நாகர்கோவிலில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்கள் தமிழ் மாநிலச் சங்கத்தின் 5 வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்!.


Tuesday, 1 October 2013

Friday, 27 September 2013