தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label ஊடகத் தகவல்கள். Show all posts
Showing posts with label ஊடகத் தகவல்கள். Show all posts

Saturday, 31 August 2013

பொருளாதார நெருக்கடி - யார் காரணம்?



அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் இதுவரை 16 சதவீதம் சரிவடைந்துள்ளது. நிதி ஆண்டின் தொடக்கத்தில் ரூ 54 ஆக இருந்த டாலர் தற்போது ரூ65 ஆக குறைந்துள்ளது. இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. பன்னாட்டு நிதிமூலதன கும்பலுக்கு இந்திய சந்தையை திறந்து விட்டதற்கான விலையை ஒட்டுமொத்த இந்திய மக்களும் தரப் போகிறார்கள். அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை நிறுத்தப் போவதால் அன்னிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை பெருமளவில் விலக்கிக் கொண்டுள்ளன. இதனால் ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்துள்ளது. ஏற்கெனவே நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் இந்த டாலர் வெளியேற்றத்தை குறைப்பதென்பது பெரும் சவாலாக இந்திய அரசுக்கு மாறியிருக்கின்றது. ரூபாய் மதிப்பு சரிவால் கச்சாஎண்ணையின் கொள்முதல் செலவு பெருமளவில் அதிகரிக்கும். அதன் தொடர்விளைவாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படும். இது சங்கிலித் தொடர்போன்று விலைவாசி உயர்வையும் மக்களின் வாங்கும் திறனையும் குறைத்து மேலும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்.

ஒரு நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் எனில் அந்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் இந்திய ஆளும் வர்க்கம் பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகளாகவும் அவர்களின் நலனை காப்பாற்றுவதற்காக இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைக் கொலை செய்யவும் தயங்காத கொலைகார கும்பலாகவும் இருப்பதால் அனைத்துத் துறைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிதியாதிக்க கும்பலுக்கும் திறந்துவிட்டனர். அவர்கள் தங்கள் விருப்பம்போல் கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தனர். இதன் விளைவாக ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்து இன்று முடமாகிக் கிடக்கின்றது. பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியைக் குறைத்துள்ளன. பல லட்சம் தொழிலாளிகள் வேலையிழப்புக்கு உள்ளாகி உள்ளனர்.