தலைப்புச் செய்திகள்
Showing posts with label பத்திரிகைச் செய்திகள். Show all posts
Showing posts with label பத்திரிகைச் செய்திகள். Show all posts
Wednesday, 5 February 2014
Wednesday, 29 January 2014
Saturday, 25 January 2014
Monday, 20 January 2014
கணவரின் ஊதியத்தை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு
அரசுப் பணியில் உள்ள கணவரின் ஊதியத்தை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தனது கணவரின் ஊதிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஜோதி ஷெராவத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஊதிய விவரங்களை ஜோதிக்கு அளிக்கக்கூடாது என்று அவரின் கணவர் எழுத்துபூர்வமாக கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஊதிய விவரங்களை அளிக்க டெல்லி உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த அவர், ஜோதி ஷெராவத்தின் கணவரின் ஊதிய விவரங்களை உடனடியாக அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உள்துறை அமைச்சகத்தை அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்களுக்கும் உரிமை உண்டு
இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: கணவர் அரசு ஊழியராக இருந்தால் அவரின் ஊதிய விவரங்களை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு.
மேலும் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப் படுகிறது. எனவே அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக அளிக்கப்படும் மனுக்களை அரசுத் துறைகள் நிராகரிக்கக்கூடாது என்று ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.
Saturday, 18 January 2014
Friday, 17 January 2014
காலனிய காலத்து முறை . . .
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் ஷூவை அவரது உதவியாளர் (டபேதார்) சுமந்து நின்ற சம்பவம் அரசு ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சி மன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் மகளிர் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்களும், மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
டபேதார் கையில்...
முன்னதாக காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் நடராசன், கூட்டம் நடைபெறும் இடம் அருகே கழட்டி வைத்த ஷூவை, டபேதார் ராஜகோபால் கையில் ஏந்தி நீண்டநேரம் (அரை மணிக்கும் மேல்) நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்ததும், ஆட்சியர் நடராசன் ஷூவை அணிவதற்கு வசதியாக டபேதார் கீழே வைத்த ஷூவை அணிந்து கொண்டு ஆட்சியர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஜி. பைரவ நாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், அரசு நிகழ்ச்சி ஒன்றின்போது, ஆட்சியரின் ஷூவை டபேதார் ராஜகோபால் நீண்டநேரம் கையில் சுமந்து நின்ற சம்பவம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)


