தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday, 6 September 2013

விலை உயர்ந்தாலும் கவலை இல்லை : பெரும் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்வதே முதல் வேலை ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவிப்பு




அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் என்ற அபாயம் ஏற்பட்டாலும், வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு பெருமுதலாளிகள் முதலாளிகளது முதலீடுகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்வோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ள ரகுராம் ராஜன் கூறினார்.

லாபம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அதி காரப்பூர்வமாக உத்தரவாதம் கிடைத்த நிலையில், இந்தியாவில் முதலீடுகள் செய்யத்திட்டமிட்டுள்ள வெளிநாட்டு மற் றும் உள்நாட்டு முதலாளிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியின் விளைவாக, ரூபாய் மதிப்பு சில புள்ளிகள் உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் தீவிரமடைந்தாலும், இந்தியா வில் மன்மோகன் அரசு ஏற்கனவே பின்பற்றி வரும் நாசகரப் பொருளாதார தாராளமயக் கொள்கைகளால் ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந் துள்ள போதிலும், அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமலாக்குவது என காங்கிரஸ் கூட்டணி அரசு காரியங்களை ஆற்றி வரு கிறது.

அதன் ஒரு பகுதியாகவே ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் வைத்து சூறையாடுவதற்கு அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது உள்பட பல நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தங்களது திட்டங்களையெல்லாம் மறுப்பேதும் கூறாமல் அமல்படுத்துகிற விதத்தில் தங்களுக்கு நம்பகமான நபரான ரகுராம் ராஜனை மத்திய அரசு நியமித்தது. பன்னாட்டு நிதி நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ரகு ராம் ராஜன், புதனன்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றார்.

Thursday, 5 September 2013

ஊழியர் விரோத பென்சன் மசோதா நிறைவேறியது : இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு



இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோ தாவை மன்மோகன் சிங் அரசு புதனன்று மக்களவையில் நிறைவேற்றியது. இதன் மூலம் உத்தரவாதப் படுத்தப்பட்ட ஓய்வூதியத் திற்குப் பதிலாக ஊழியர் களின் ஓய்வூதியத்தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்து சூறையாட வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று தொழிலாளர்களும் ஊழியர்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த ஊழியர் விரோத மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 என்று பெயரிடப்பட் டுள்ள இந்த மசோதா இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2005ம் ஆண்டிலிருந்தே இம்மசோதாவை நிறைவேற்ற அரசு துடித்தது.

2005ம் ஆண்டில் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மசோதா 2011ம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த மசோதா ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு சட்ட ரீதியான அதி காரங்களை அளிக்க வகை செய்கிறது. 2003ம் ஆண்டு இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இது இடைக்கால ஆணையம்தான் என்றும் பிறகு சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்படும் என்றும் அப்போதைய பாஜக அரசு கூறியது.

ஆனால் நிர்வாக உத்தரவு மூலம் 2004ம் ஆண்டு முதல் இந்த ஆணையம் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்த மசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு சில முக்கிய திருத்தங்களை கொடுத்திருந்தது. இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளதன் மூலம் ஓய்வூதிய நிதி நிறுவனங்களிலும் அந்நிய மூல தனம் 49 சதவிதம் அளவுக்கு அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஓய்வூதிய நிதியில் முற்றாக அந்நியரை அனுமதிக்கவும் மன் மோகன் சிங் அரசு திட்ட மிட்டுள்ளது.

இம்மசோதாவை நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் அரசு குறியாக இருந்த நிலையில், புதனன்று நாடாளுமன்றத்தில் நிலக்கரி பங்குகள் தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரம் வெடித்தது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. மத்திய நிதியமைச்சர் . சிதம்பரத்தால் இம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பங்குச்சந்தையில் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்வது மற்றும் அந்நியரை அனுமதிப்பதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய .சிதம்பரம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பெரும்பாலான திருத் தங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறினார்.

இம்மசோதா நிறைவேற்றப் படுவதால் ஊழியர்கள் பலனடைவார்கள் என்று கூறிய அவர், உறுதிப்படுத்தப் பட்ட ஓய்வூதியத்திற்கு ஆபத்து இருக்காது என்றார். பின் னர் இம்மசோதா அவையில் நிறைவேற்றப் பட்டது.

Wednesday, 4 September 2013

ரகுராம் ராஜனுக்கு புரியுமா?



ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இன்று பதவியேற்கிறார். ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்து கொண்டிருக்கும் போதி லும், பொருளாதாரசீர்திருத்தங்களைமேலும் தீவிரமாக அமலாக்குவோம் என்று சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிற பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நம்பகமானவர்தான் இந்த ரகுராம் ராஜன்.

பன்னாட்டு நிதி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பொருளாதார நிபுணர். கடந்த ஓராண்டு காலம் சிதம்பரத்தின் நிதியமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். இன்று ஓய்வு பெறுகிற டி.சுப்பாராவுக்கு அடுத்து, திடீரென்று ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அறி விக்கப்பட்டு பொறுப்பேற்கிறார் ரகுராம். நாடு எதிர்கொண்டுள்ள நடப்புக்கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சனைக்கு ஒரே இரவில் தீர்வு கண்டுவிட முடியாது என்று பதவியேற்புக்கு முன்பு தனது பேட்டியில் கூறியிருக்கிறார் இவர்.

Tuesday, 3 September 2013

இருட்டு நம்பிக்கை உதவாது!



இரவு நேரத்தில் பெட்ரோல் பங்க் மூடுவதால், அன்னியச் செலாவணியைக் குறைத்துவிடலாம் என்கிற இருட்டு நம்பிக்கைக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டவுடன், "அத்தகைய முடிவை அரசு மேற்கொள்ளவில்லை. இது வெறுமனே மக்கள் அளித்த யோசனைதான்' என்று தட்டைத் திருப்பிப் போடுகிறார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

இப்போதைய நடைமுறையிலேயே, நகரங்களில் இரவு நேரத்தில் திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் இத்தகைய யோசனையை மக்கள் சொன்னார்கள் என்று சொல்வதே ஒரு போலித்தனம்.

சில நாள்களுக்கு முன்பு "அசோசெம்" மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சரிசெய்ய முதல் நடவடிக்கையாகத் தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி அளவைக் குறைத்தாக வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 2012-13 நிதியாண்டில் பொருள்கள் இறக்குமதி 195 பில்லியன் டாலராக இருந்தது என்றால், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி 109 பில்லியன் டாலராகவும், தங்கம் இறக்குமதி 47 பில்லியன் டாலராகவும் இருந்தன. பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதியைக் குறைக்க வேண்டியது அவசியம் என்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

அதிகமான அன்னிய செலாவணியைக் கொடுத்து பெட்ரோலிய கச்சா எண்ணெயை பெருமளவு இறக்குமதி செய்து, அதை மானியத்தில் மக்களுக்கு வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், இந்த பெட்ரோலியப் பொருளை பயன்படுத்துவோர் யார்? அதிகம் வீணடிப்பது யார்?