வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு தாரளமாக
இருக்கும் என்றும் நாட்டின் பலத்தை வலுப்படுத்த ஆயுதங்கள் வாங்கி குவிப்பதே மத்திய
அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்று மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் நிதி
மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.
இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவும், கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய
நாடுகளின் ஆயுதக் கம்பெனிகள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அவர்களை
மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, அமைச்சர் அருண்ஜெட்லி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment