தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 28 September 2013

பாவம் பிரதமர்!



இதைவிட நாற்சந்தியில் நிற்க வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி கன்னத்தில் பளார், பளாரென்று அறைந்திருந்தாலும் கூடப் பரவாயில்லை. இந்த அளவுக்கு அவமானம் ஏற்பட்டிருக்காது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க இருக்கும் நாளில், இப்படியொரு கருத்தை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரதமரை ராகுல் காந்தி கேவலப்படுத்தி இருக்கக் கூடாது!

இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக கிரிமினல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியில் தொடர வகை செய்யும் அவசரச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சட்டத்திருத்தம் அனுப்பப்பட்டபோது, அவர் அதில் சில ஐயப்பாடுகள் இருப்பதாகவும், வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் நாடு திரும்பியவுடன் அவரிடம் சில விளக்கங்கள் பெற்ற பிறகு கையொப்பம் இடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதாவது, தனக்கு இந்த அவசரச் சட்டத்திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர்.

Friday, 27 September 2013

பகத்சிங் - பிறந்த தினம் 28.09.2013



பகத் சிங் - இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் பிரமிப்பானவை.

பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். அதனால் ஊர்க்காரர்கள் யாரும் அவர்கள் இருந்த இடத்தினருகே போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள்.

"அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமை இல்லையா ?" என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.

லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழி தீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு, சுக்தேவ், ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார் பகத் சிங். அதற்குக் காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்று விட்டார்கள். ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது.

STAGNATION – ஊதிய தேக்க நிலை



RM, Gr. D கேடர்களில் தொடரும் ஊதிய தேக்கநிலையை களைய வேண்டும் என்ற கோரிக்கையை நமது சங்கம் முன் வைத்திருக்கிறது. வேலை நிறுத்தத்தில் இது ஒரு முக்கியமான கோரிக்கை. 17.09.2010 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் இதன் மீது விவாதம் நடைபெற்றது. பரிசீலிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
அதன் தொடர்ச்சியாக நமது பொதுச் செயலர் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். NE-2 (7840 – 14700) முதல் NE-5 (8700-16840) வரையிலான ஊதிய விகிதங்களை ஒருங்கிணைத்து அந்த ஊழியர்களுக்கு வழங்குவது ஒன்று தான் அவர்களின் ஊதிய தேக்க நிலையை நிவர்த்தி செய்யும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

JCM ஊழியர் தரப்பு மேலும் நால்வர் நியமனம்


திரு. சுப்புராமன்
திரு. சுரேஷ்குமார்
திரு. ரவீந்திரன்
திரு. கோஹ்லி ஆகியோரை
JCM ஊழியர் தரப்பு பிரதிநிதிகளாக நியமித்து
நமது பொதுச்செயலர்,
நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.