தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 5 September 2013

ஊழியர் விரோத பென்சன் மசோதா நிறைவேறியது : இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு



இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோ தாவை மன்மோகன் சிங் அரசு புதனன்று மக்களவையில் நிறைவேற்றியது. இதன் மூலம் உத்தரவாதப் படுத்தப்பட்ட ஓய்வூதியத் திற்குப் பதிலாக ஊழியர் களின் ஓய்வூதியத்தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்து சூறையாட வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று தொழிலாளர்களும் ஊழியர்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த ஊழியர் விரோத மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 என்று பெயரிடப்பட் டுள்ள இந்த மசோதா இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2005ம் ஆண்டிலிருந்தே இம்மசோதாவை நிறைவேற்ற அரசு துடித்தது.

2005ம் ஆண்டில் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மசோதா 2011ம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த மசோதா ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு சட்ட ரீதியான அதி காரங்களை அளிக்க வகை செய்கிறது. 2003ம் ஆண்டு இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இது இடைக்கால ஆணையம்தான் என்றும் பிறகு சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்படும் என்றும் அப்போதைய பாஜக அரசு கூறியது.

ஆனால் நிர்வாக உத்தரவு மூலம் 2004ம் ஆண்டு முதல் இந்த ஆணையம் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்த மசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு சில முக்கிய திருத்தங்களை கொடுத்திருந்தது. இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளதன் மூலம் ஓய்வூதிய நிதி நிறுவனங்களிலும் அந்நிய மூல தனம் 49 சதவிதம் அளவுக்கு அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஓய்வூதிய நிதியில் முற்றாக அந்நியரை அனுமதிக்கவும் மன் மோகன் சிங் அரசு திட்ட மிட்டுள்ளது.

இம்மசோதாவை நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் அரசு குறியாக இருந்த நிலையில், புதனன்று நாடாளுமன்றத்தில் நிலக்கரி பங்குகள் தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரம் வெடித்தது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. மத்திய நிதியமைச்சர் . சிதம்பரத்தால் இம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பங்குச்சந்தையில் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்வது மற்றும் அந்நியரை அனுமதிப்பதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய .சிதம்பரம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பெரும்பாலான திருத் தங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறினார்.

இம்மசோதா நிறைவேற்றப் படுவதால் ஊழியர்கள் பலனடைவார்கள் என்று கூறிய அவர், உறுதிப்படுத்தப் பட்ட ஓய்வூதியத்திற்கு ஆபத்து இருக்காது என்றார். பின் னர் இம்மசோதா அவையில் நிறைவேற்றப் பட்டது.

No comments:

Post a Comment