தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 27 January 2015

Friday 23 January 2015

இரண்டு மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்



சம்பளம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

திருநெல்வேலி, ஜன. 22-பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநெல்வேலி ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல்.கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடுதொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்யு மாவட்ட உதவிச் செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் கனகமணி, சுவாமிநாதன்,பிச்சுமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தர்ராஜன், சேவியர், திவ்யா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Sunday 18 January 2015

Tuesday 13 January 2015

Sunday 11 January 2015





25 ஆயிரம் பேரின் வேலையை பறிக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு

சென்னை, ஜன. 10 -
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனம் சுமார் 25 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வது என எடுத்துள்ள முடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்த்துள்ளது. இதில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றும், டிசிஎஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை முறைப்படுத்ததனிச்சட்டம் கொண்டுவரவேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு சென்னையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாநாட்டு வரவேற்புக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஏற்பாடுகள் குறித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் சட்டமன்றக்குழு தலைவருமான அ.சவுந்தரராசன் கூறியதாவது:-
செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக கெட்டுவிட்டது. கூலிக்கு கொலை, திருட்டு, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்றவை அதிகரித்துவிட்டது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கேட்டால், கடந்த ஆண்டை விட குறைந்துள்ளன. புகார்கள் அனைத்தையும் பதிவு செய்வதால் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சமாதானம் சொல்கின்றனர்; உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க மறுக்கின்றனர்.அரசு செயலற்று கிடக்கிறது என்பதை போக்குவரத்து ஊழியர்கள், சர்க்கரை ஆலை ஊழியர் போராட்டங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. நோக்கியா, பிஒய்டி, பிளக்ஸ்ட்ரான் போன்ற நிறுவனங்களில் 25ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
19வயதில் வேலைக்கு எடுத்து 25வயதில் வெளியேற்றி விடுகின்றனர். பாக்ஸ்கான் நிறுவனத்தை மூடி உள்ளனர். இதனால்நேரடியாக 1200பேரும், மறைமுகமாக ஆயிரக்கணக்கானோ ரும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.தொழிற்சாலை ஆய்வாளர், தொழிலாளர் ஆய்வாளர் போன்ற பிரிவுகள் தூங்குகின்றன. இந்தத் துறைகளின் மூலம், கடந்த 65 ஆண்டுகளில் எத்தனை முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.
தனிச்சட்டம்
டிசிஎஸ் நிறுவனத்தில் 25ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளனர். 35வயதுக்கு மேற்பட்டவர்களை குறிவைத்து வெளியேற்றுகின்றனர். தொழில்தகராறு சட்டத்தின்படி வேலையிலிருந்து நீக்க வேண்டுமெனில், நியாயமான காரணங்களை கூறி அரசிடம் அனுமதி பெறவேண்டும். புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கக்கூடாது. ஆனால் இங்கு வேலை இல்லை
டிசிஎஸ் ஊழியர்களுக்கு சிஐடியு ஆதரவு
புதுதில்லி : நாடு முழுவதும் ஏராளமான மையங்களில் பல்லாயிரக்கணக்கா
ன ஊழியர்களின் வேலையை பறிக்க நாட்டின் மிகப்பெரும் ஐ.டி. நிறுவனமான டிசிஎஸ் முடிவு செய்திருப்பதை இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன் சென் எம்பி ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இது எந்தவிதத்திலும் தார்மீக நெறியற்றது என்றும் நீதியற்றது என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், வேலை பறிக்கப்படும் ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரும் லாபம் அடைவதற்காக இடைவிடாமல் தங்களது உழைப்பை செலுத்தியவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர். டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ள சிஐடியு, அவர்களுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் குரல் எழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது

Friday 9 January 2015


மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த 

 விஜய்மல்லையா


ரூ. ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு டாட்டா காட்டி விமானத்தில் பறக்கிறார். கடன் கொடுத்த வங்கியாளர்கள் நமக்கென்ன ரிசர்வ் வங்கியிடம் கடன் காரங்க லிஸ்ட் கொடுத்தாச்சு. அடுத்த டார்கெட்டுக்கு ஆள்பிடிப்போமென புது தொழிலதிபருக்கு கடன் கொடுக்கிற வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள்.அந்த கடனைக் கொடுக்கச் சொல்லி வங்கிகளுக்கு உத்தரவு போட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் எங்க ஆட்சியிலதான் அதிகமான தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்திருக் கோம் என மார்தட்டி பேட்டி கொடுத்துட்டு போறாரு. ஆனால் நமக்கெல்லாம் சோறுபோடும் கோவணம் கட்டிய ஏழை விவ சாயி சில ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான் என்ற கோபக்குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.வங்கிகளில் கடனை வாங்கிக் கொண்டு ஏமாற்றித் திரியும் தொழிலதி பர்களில் முக்கிய இடத்தை வகிப்பவர் தொழிலதிபர் திருவாளர் விஜய் மல்லைய் யாதான்.
ஒரு கையில் மதுக்கோப்பை, மறுகையில் போஸ் கொடுக்கும் மாடல் கள் சகிதமாக உலாவரும் சாராய சாம் ராஜ்ய சக்கரவர்த்தி மல்லையாவின் தயாரிப்பான சாராயத்தை அடித்துவிட்டு தள் ளாடும் குடிமகன்கள் போல் இவரது கிங் பிஷர் விமான ப்போக்குவரத்து நிறுவனமும் தள்ளாடித் தள்ளாடி கீழே விழுந்துவிட்டது. இருந்தபோதிலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தில்லாக உலகை வலம் வருகிறார்.கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண் டவர் மல்லையாவின் தந்தைவிட்டல். 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு 1983ல் மறைந்த போது மல்லையாவுக்கு வயது 27, ஆனா லும் 10கோடி டாலர்களாக இருந்த சொத்தை பல்வேறு தகிடு தத்தங்களை செய்து 400 கோடி டாலர்களாக உயர்த்தினார் மல்லையா.
1984ல் மல்லையா “யுனைட்டெட் புரூவரிஸ்” தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இது உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில முக்கிய பிராண்ட்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே. மல்லையா மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்களை வாங்கி யுனைட்டெட் ப்ரூவரிஸ் உடன் இணைத்துக் கொண்டார். தற்போது இந்நிறுவனத்தின் ஆண்டு சாராய விற்பனை 20 ஆயிரம் கோடிக்கும் மேல்.விமானபோக்குவரத்து தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பிறகு கடந்த 2003ல் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை‘ தொடங்கினார் மல்லையா. அது ஒரு காலத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக 64 விமானங் களை இயக்கியது. 2007ல் சிறிய விமானங்களை இயக்கும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான `ஏர்டெக்கானை’ வாங்கிய மல்லையா அதை `கிங் பிஷர் ரெட்’ என பெயர் மாற்றி இயக்கினார். பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக 2011ல் `கிங்பிஷர் ரெட்’ மூடு விழாகண்டது.
பணம்குவிக்கும் சகுனியாட்டத் தில் மட்டுமின்றி நிஜமான விளையாட்டி லும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம்.2007ல் இவரும் ஒரு ஆலந்து குடும்ப மும் இணைந்து ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினார். அதற்கு போர்ஸ் இண்டியா என்ற பெயரை சூட்டி னார். கொல்கத்தாவை சேர்ந்த கால்பந்து கிளப்புகளான மோகன்பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் மல்லையா பெரும் முதலீடுகளை செய்தார். கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல்கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். கிரிக்கெட் உலகின்சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி சில ஆண்டுகளுக்கு முன் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் கடந்த ஆண்டில் படுதோல்வியை சந்தித்தது.குதிரைப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான மல்லையா கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்துவிரிந்த `குனிகால்’ குதிரைப் பண்ணைக்கு சொந்தக்காரர். இந்தப் பண்ணையை கர்நாடக மாநில அரசுக்கே குத்தகைக்கு விட்டுள்ளார் மல்லையா.மல்லையாவிற்கு உலகம் முழுக்க 26 இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன.
அவற்றில் மொக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலுள்ள மாளிகைகளும், பெங்களூருவில் உள்ள பரம்பரை வீடும்அடங்கும். மிகுந்த ஆன்மீக நம்பிக்கை? கொண்டவர் மல்லையா ராகுகாலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. கடந்த காலங் களில் புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்ட பிறகுதான் பறக்கவே அனுமதிப்பார். திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.975 கோடி செலவில் தங்கத்தேர் ஒன்றையும் அன்பளிப்பாக அளித்துள்ளார் திருவாளர் மல்லையா. அந்த அளவுக்கு ஆன்மீகத் தில் நம்பிக்கை.இவர் தனது பொக்கிஷங்களாக கருதிகாத்து வருவது விலையுயர்ந்த கார்கள்,கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகள்தான். 2004ல் லண் டனில் நடந்த ஏலத்தில் திப்புசுல்தானின் வாளை ஒரு லட்சத்து 75 ஆயிரம் பவுண்டு கள் கொடுத்து ஏலம் எடுத்தார். 2009ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியின் கடிதத்தை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார்.மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரர்ஸ்’ என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று.
கலிஸ்மா என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.இத்தனை ஆடம்பரத்திற்கும், ஊதாரிதனத்திற்கு சொந்தக்காரராக இருக்கும் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிக் குவித்த கடன்கள் எவ்வளவு தெரியுமா? இதோ பட்டியல்.
எஸ்பிஐ கேபிட்டல் வங்கி ரூ.1,600 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.870 கோடி
பாங்க் ஆப் இந்தியா ரூ.650கோடி
பாங்க் ஆப் பரோடா ரூ.550 கோடி
யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா ரூ.430 கோடி
சென்ட்ரல் பாங்க் இந்தியா ரூ.410 கோடி
யூசிஓ வங்கி ரூ.320கோடி
கார்ப்பரேஷன் வங்கி ரூ.310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் ரூ.150 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.140கோடி
பெடரல் பேங்க் ரூ.90கோடி
பஞ்சாப் மற்றும் சிந்துபேங்க் ரூ.60கோடி
ஆக்சிஸ் பேங்க் ரூ.50 கோடி
ஜம்மு-காஷ்மீர் வங்கி ரூ.80கோடி
ஒரியன்டல் பாங்க் ஆப் கமர்ஸ் ரூ.50கோடி
எஸ்.ஆர்.இ.ஐ. உள்கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் ரூ.430கோடி
இவரது கடன் பட்டியலை படிக்கும் போதே கண்ணைக் கட்டுகிறது இல்லையா? இவ்வளவு கடன்களையும் வாங்கிக் கொண்டுதான் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துள்ளார் மல்லையா.யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் மல்லையா வேண்டுமென்றே தான் வாங்கிய கடனைக் கட்டாமல் பிடிவாதம் பிடிக்கிறார் என குற்றம்சாட்டி உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இவருக்கோ, இவர் சார்ந்த நிறுவனங்களுக் கோ வங்கி சார்பில் எந்த கடனும் கொடுக் கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.
மேலும் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும் இவ்வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விஜய்மல்லையா, ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ்குப்தே ஆகியோரை கடன் ஏய்ப்பாளர்களாக இவ்வங்கியின் ஜி.ஆர்.பி. அமைப்பு அறிவித்துள்ளது. மல்லையாவின் இந்தச் செயல்குறித்து மத்திய நிதிஅமைச்சகம், ரிசர்வ் வங்கி,செபி ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட் டுள்ளதாக கடன் கொடுத்த வங்கிகள் அறிவித்துள்ளன. ஏற்கெனவே மல் லையாவை மாபெரும் கடன் ஏய்ப்பாளராக அறிவிக்கலாம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கிங் பிஷர் நிறுவனத்தையும் மல்லையா உள்ளிட்ட அதன் 4 இயக்குநர்களையும் கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எல்லா வங்கி நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவ்வளவு கடன்களையும் வாங்கிக் கொண்டு மது சூது, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென எந்தக் கூச்சமுமின்றி உலா வருகிறார் மல்லையா. சாதாரண நபர்கள் ஒரு இலட்சம், இரண்டு லட்சம் கடன் வாங்கினால் வீடுகள், தொழில் நிறுவனங்களை கையகப்படுத்துவதும், தங்களது பிள்ளைகளின் கல்விக் கடனை செலுத்த முடியாமல் இருக்கும் பெற்றோர்களின் பெயர்களை கடன் செலுத்தாதோர் பட்டியலில் வைத்து அசிங்கப்படுத்தும் வங்கி நிர்வாகங்கள், மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு திரியும் மல்லையா மீது என்ன நட வடிக்கை எடுக்கப் போகிறார்கள். வங்கித் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி என்ன செய்யப் போகிறார்?

Thursday 8 January 2015

இந்தியாவை வேட்டைக்காடாக அறிவிக்கின்ற அரசியல்வாதிகளை சொல்லவா ? அவர்களை மட்டும் செமையாக கவனித்துவிட்டு இந்திய உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிச்செல்லும் முதலாளிகளைச் சொல்லவா ? அவர்களுக்காக காவடி தூக்கும் அப்பாவிகளைச் சொல்லவா ?

ஏமாந்த சோனகிரிகளா நாம்?
அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் நமது அரசுகள், துவங்கும் போது பல சலுகைகளை அளிக்கின்றன.அவை கோடிக்கணக்கான ரூபாய்களை லாபமாக சம்பாதித்து விட்டு, பறந்து போன பின்பு, மௌனமாய் வேடிக்கை பார்க்கின்றன. நகர்ப்புறங்களில்,திடீர் திடீரென்று முளைக்கும் சில சீட்டுக் கம்பெனிகள், பணம் கட்டி 6 மாதங்களில் இரட்டிப்பு மடங்கு பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றும்.மக்கள் ஏமாந்து நிற்பார்கள்.அதற்குப் பிறகு தான் தமிழ்சினிமா மாதிரி போலீஸ் எல்லாம் வரும். 
நோக்கியாவைத் தொடர்ந்து பாக்ஸ்கான் கம்பெனியும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கம்பி நீட்டுகிறது.
இது செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனி.2006 இல் தொடங்கப் பட்டது.
ப்ளஸ் டூ படித்த மாணவர்களைக் கூட வேலைகளுக்கு எடுத்தார்கள்.பெரிய பன்னாட்டு கம்பெனி..எதிர்காலத்தில் நல்ல சம்பளம் கிடைக்கும் என நினைத்து 18 வயதிலேயே தொழிலாளர்களாய் சேர்ந்தனர்.மேற்படிப்பை துறந்து விட்டு, 3000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தனர்.ஆனால் இன்றோ, இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.
எல்லா சலுகைகளையும் அனுபவித்து விட்டு,கோடி கோடியாய் லாபம் ஈட்டி விட்டு நோக்கியா ஓடி விட்டது.அதைக் காரணம் காட்டி, இப்போது பாக்ஸ்கானும் ஓடப் பார்க்கிறது.உண்மையில் இது நோக்கியாவை விட மிகப் பெரிய பன்னாட்டுக் கம்பெனி.உலகம் முழுவதும் இதற்கு 6 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.தற்போது 1700 தொழிலாளர்கள் மட்டுமே இங்கே பணி புரிகின்றனர்.
இவர்கள் இஷ்டத்திற்கு தொழிற்சாலையை மூடக் கூடாது என தொழிலாளர் நலத்துறை சொல்லி வருகிறது.ஆனால், ஆலை வாசல் மூடிக் கிடக்கிறதே?
அரசு என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா?
58 வயது வரை வேலை உறுதி என்று சொல்லி விட்டு, 25 வயசிலேயே வீட்டிற்குப் போ என்று சொல்கிறதே? ஒரு நியாயம் வேண்டாமா?
இந்த 1700 தொழிலாளர்களுக்காக CITU, LPF உள்ளிட்ட சங்கங்கள் போராடிக் கொண்டு இருக்கின்றன.
இது போன்ற செய்திகளை முன்னணி செய்தித்தாள்கள் தருவதில்லை.
நாளைக்கு, நம் வீட்டுக் குழந்தைகள் வேலை பார்க்கும் பன்னாட்டுக் கம்பெனியும் இதே போல செய்யாது என்பது என்ன நிச்சயம்?

Wednesday 7 January 2015

ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர்

தோழர்.குணசேகரன் துவைக்கிவைத்தல்

Monday 5 January 2015

BSNL அனைத்து ஊழியர்கள் 
அதிகாரிகள் கூட்டமைப்பு 
காரைக்குடி
  நமது BSNL  காக்க நாடு தழுவிய தர்ணா 
மற்றும் ஒருகோடிகையெழுத்துஇயக்கம் முதல்
கையெழுத்திட்டு இணைந்தபோராட்டத்தை 
துவக்கிவைப்பவர் இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சி 
சிவகங்கை சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் 
அனைத்து சங்க 
த ர் ணா 
06/01/2015 - செவ்வாய்க்கிழமை காலை 10 மணி 
பொது மேலாளர் அலுவலகம் காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 
·                     கார்வண்ணன் - AITUC 
·                     சிவாஜி  - CITU 
·                     பரமசிவம் - AIBSNLEA
·                     செல்வின் சத்தியராஜ் - BSNLEU 
·                     பிரான்சிஸ் -SNEA 
·                     மோகன்தாஸ் -AIBSNLEA
·                     செல்லப்பா - SNATTA
·                     குமார் -AIBSNLOA 
·                     முருகன் - NFTE
·                     பூமிநாதன் - BSNLEU
·                     நாகேஸ்வரன் - AIBSNLPWA

·                     சுப்பிரமணியன் - AIBDPA 
வோடாபோனுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை றசொந்தக் கம்பெனிக்கு எந்த உதவியும் இல்லை
பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் மோடி அரசு

புதுதில்லி, ஜன. 4 -
பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிக்கக்கோரி நாடு முழுவதும் அனைத்து மாவட் டங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித் துள்ளது.தில்லியில் பிஎஸ்என்எல் சங்கங்களின் சம்மேளனத்தின் அமைப்பாளர் வி.ஏ.என். நம்பூதிரி கூறியதாவது:பிஎஸ்என்எல் நிறு வனத்தைப் புதுப்பிக்க அவசர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வாடிக்கை யாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை களை மேம்படுத்த வேண்டும்.
இதுகுறித்து அரசும் பிஎஸ்என்எல் நிர்வாக மும் எதிர்மறையான அணுகுமுறையையே மேற்கொள் கின்றன. மொபைல் வழித்தடங் கள், கேபிள்கள், மின்கம்பிகள், பிராட்பாண்ட் மோடம் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட பல கருவிகள் புதிய தொடர்புகள் வழங்கவும் மேம்பட்ட சேவையை வழங்கவும் தேவைப்படு கின்றன. இவற்றை அரசு உட னடியாக வழங்க வேண்டும்.தகவல்தொடர்புத்துறை அமைச்சர் பிஎஸ்என்எல் அலைக்கற்றைகளை சமர்ப்பித் ததற்காக கட்டணமாக 6000 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். இதேபோல நிலுவைத் தொகையாக யூஎஸ்ஓ நிதியிலிருந்து 1,250 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது.வோடபோன், நோக்கியா ஆகிய கம்பெனிகளுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசின் சொந்தக் கம்பெனியான பிஎஸ்என்எல்க்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை.பிஎஸ்என்எல்லின் மூன்று பதவிகளான சிஎம்டி, இயக்குநர்(நிதி) மற்றும் இயக்குநர் (மனிதவளம்) ஆகியவை பல மாதங்களாக நிரப்பப்படவில்லை. இதனால் அன்றாடச் செயல்பாடுகள் தாமதமாகின்றன.1,30,000 தொழிலாளர்கள் பழுதடைந்த தடங்களை சரி செய்வது, பராமரிப்பு ஆகிய பணிகளை பார்த்து வந்தனர்.
கடந்த 2000ல் இவர்கள் பதவி ஓய்வு பெற்றனர். ஆனால் அதற்கு பின்னர் இவர்களின் காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் குறித்து தொடர்புத்துறை அமைச்சர், பிஎஸ்என்எல் செய லாளர் டிஓடீ, டிஎம்டி ஆகியஅனைத்துத்துறை அதிகாரிகளி டமும் அனைத்து பிரச்சனைகள் குறித்து விரிவான மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனை கள் குறித்து பேசுவதற்கு ஊழி யர்களை அழைத்து ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலைமை களில் பிஎஸ்என்எல் சங்கங்களின் சம்மேளனம் வரும் ஜனவரி 6ம்தேதியிலிருந்து 8ம்தேதி வரை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளது.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மார்ச் 17ம்தேதியிலிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம், போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துக் கொள் கிறோம். (ஐஎன்என்)