தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 23 September 2016

பொது மேலாளருடன் ஒரு சந்திப்பு

பொது மேலாளருடன் ஒரு சந்திப்பு

  22.09.16 அன்று காரைக்குடி வந்திருந்த பொது மேலாளரை புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் சந்தித்து அறிமுகம் செய்து கொண்ட பின் மதுரை மாவட்டத்தில் இருந்து  தற்காலிக மாற்றலில் காரைக்குடி வந்து நீண்ட காலமாக இங்கேயே பணி ஆற்றுகிற தோழர்.G.மனோகரன் அவர்களை மதுரை மாவட்டத்திற்கு திருப்பி அனுப்புவது உள்ளிட்ட பிரச்சனைகள் பேசப்பட்டன.

   மாவட்ட தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் மணிவாசகம் பொருளாளர் செழியன், துணைப்பொருளாளர் கனகராஜன், மற்றும் அமைப்பு செயலர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Monday 19 September 2016





        நாடுதழுவிய உண்ணாவிரதம் 
                    20.09.2016


1)  01.01.2017 முதல் அமுலாக்கப்பட வேண்டிய ஊதியமாற்றத்திற்கான பேச்சுவார்த்தையை உடனே துவங்கிடுக.
2)  புதிய PLI பார்முலாவை உருவாக்கு.  ஆயுத பூஜாவிற்கு முன்தற்காலிக PLI ஆக குறைந்தபட்சம்  ரூ.7,000/- வழங்கிடுக.
3) ஒவ்வொரு ஆண்டும் தேக்கநிலை ஊதியம் வழங்கி ஊதிய தேக்கத்திற்கு முடிவுகட்டிடுக.
4) NEPPயில் நிர்வாகம் உருவாக்கிய சிரமங்களுக்கு தீர்வு கண்டிடுக
5) 01.10.2000 முதல் உள்ள அனாமலிகளை உடனே தீர்வு கண்டிடுக.
6) HRA  உள்ளிட்ட அலவன்ஸ்களை 78.2% IDA அடிப்படையில் வழங்கிடுக.
7) SC/ST ஊழியர்களுக்கு DoP&T உத்தரவுபடி அனைத்து பதவி உயர்வு தேர்வுகளிலும் தகுதி மதிப்பெண்களை குறைத்திடுக.
8)  BSNL நிர்வாகக்குழுவால் ஏற்றுக் கொண்ட 01.01.2007க்கு பின் பணியமர்த்தப்பட்டு விடுபட்ட கேடர்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை, நேரடி நியமன ஊழியர்களுக்கான ஓய்வூதிய பங்கு, E1 ஊதிய விகிதம் மற்றும் காசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை ஆகியவற்றை உடனே ஏற்றுக்கொள்க.
9)  விடுபட்ட கேடர்களுக்கான பெயர் மாற்றம்.
10)      PLI, LTC மற்றும்மெடிகல் அலவன்ஸ்களை மீண்டும் வழங்கிடுக.
11)      காலிப்பணியிடங்கள் உள்ள மாநிலங்களில் கார்ப்பரேட் அலுவலக உத்தரவுபடி  2013 JTO மற்றும் சமீபத்தில் நடைபெற்ற JTO/JAO,TTA/TM LICE தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்திடுக.
12)      SC/ST BACKLOG காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக.
13)      டெலிகாம் ஃபேக்டரிகளை புத்தாக்கம் செய்திடுக.
14) JTO/JAO/JE/TT தேர்வுகளை எழுதுவதற்கு நிர்ணயித்துள்ள தகுதிக்கட்டுப்பாடுகளை தளர்த்துக.
15)      01.01.2007 முதல் 09.06.2013 வரையிலானகாலத்திற்கான 78.2% IDA இணைப்பு நிலுவையினை உடனே வழங்குக.
16)       DOTயில் பயிற்சியை துவங்கி BSNLல் முடித்த தோழர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவை உடனே வழங்குக.
17)      தகுதியான ஊழியர்களை MT தேர்வு எழுத அனுமதித்திடுக.
18)      Sr.TOA /TM/ Driver உள்ளிட்ட கேடர்களுக்கு ஊதியவிகிதத்தை மாற்றிக்கொடு.  அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியை புனரமைத்திடுக.
19)      கால்செண்டர்களை BSNL ஊழியர்களை கொண்டே நிர்வகிக்க வேண்டும்.  OUTSOURCING தேவையில்லை.
20)      விடுபட்ட காசுவல் மஸ்தூர்களையும், TSM களையும், ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரம்செய்க. 
21)      காசுவல்மஸ்தூர், TSMமற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை அவர்கள் செய்யும் பணிகளை செய்யக்கூடிய நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக உயர்த்திக் கொடுத்திடுக.
22)      குறைந்தபட்ச ஊதியம், EPF, ESI உள்ளிட்ட தொழிலாளர் நலசட்டங்களை காசுவல் மஸ்தூர், TSM மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்துக.
23)      IDA ஊதியவிகிதத்தின் அடிப்படையில் காசுவல் மஸ்தூர், TSM மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்க. 
24)      புதியதாக ஆளெடுப்பு நடத்துக.

Sunday 18 September 2016



நாடு தழுவிய  உண்ணாவிரதம்  20.09.2016  -  FORUM  சார்பில் 

தேங்கி  கிடக்கிற,  C & D ஊழியர்களின்,  24 அம்ச கோரிக்கைகளை  நிறைவேற்ற  BSNL நிர்வாகத்தை வலியுறுத்தி 

அகில இந்திய, மாநில  மற்றும் மாவட்ட தலைநகர்களில் 

திரளாக கலந்து கொள்வோம். நிர்வாகத்தின் தீர்வு கோருவோம்    

Tuesday 13 September 2016


காரைக்குடியில் மாவட்ட மாநாடு 

இன்று (13.09.2016) காரைக்குடியில், காரைக்குடி SSA வின் மாவட்ட மாநாடு 
நடைபெற்றது.
   தோழர்கள்  M.முருகையா, மாநில உதவி தலைவர்  TNTCWU  மற்றும் A. பாபு ராதாகிருஷ்ணன் மாநில செயலர்  BSNLEU ஆகியோர் முறையே தேசியக்கொடி மற்றும் சங்க கொடியினை விண்ணதிரும் கோஷங்களுக்கு  இடையே  ஏற்றிவைத்தனர்
   மாவட்ட  தலைவர் தோழர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர்  தோழர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.  
    BSNLEU வின்  மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
   வாழ்த்துரையில், தோழர்கள் வி. சுப்ரமணியன் AGM (Retd.), AIBDPA மற்றும் நிர்வாகம் சார்பில் திரு. ஸ்ரீதர் DGM(CFA) அவர்களும் பேசினர்.

   மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தலை மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் நடத்தி வைத்தார் .

   தோழர்கள் P.மகாலிங்கம், M.பூமிநாதன் மற்றும் R.செழியன் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
   மாநாட்டில், அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக முதல் தவணையாக ரூபாய் பத்தாயிரமும்,  AIBDPA சார்பில் ரூபாய் ஓராயிரம் வழங்கப்பட்டது 
   புதிய மாவட்ட    செயலர் தோழர். M.பூமிநாதன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

மாநில  செயலர் கௌரவிக்கப்படுகிறார்


மாநில  செயலர் சிறப்புரை ஆற்றினார்.


DGM(CFA) Sri. SRIDHAR


மாநாட்டில்  கலந்து  கொண்டோர்



  

காரைக்குடியில் மாவட்ட மாநாடு 

இன்று (13.09.2016) காரைக்குடியில், காரைக்குடி SSA வின் மாவட்ட மாநாடு 
நடைபெற்றது.
   தோழர்கள்  M.முருகையா, மாநில உதவி தலைவர்  TNTCWU  மற்றும் A. பாபு ராதாகிருஷ்ணன் மாநில செயலர்  BSNLEU ஆகியோர் முறையே தேசியக்கொடி மற்றும் சங்க கொடியினை விண்ணதிரும் கோஷங்களுக்கு  இடையே  ஏற்றிவைத்தனர்
   மாவட்ட  தலைவர் தோழர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர்  தோழர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.  
    BSNLEU வின்  மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
   வாழ்த்துரையில், தோழர்கள் வி. சுப்ரமணியன் AGM (Retd.), AIBDPA மற்றும் நிர்வாகம் சார்பில் திரு. ஸ்ரீதர் DGM(CFA) அவர்களும் பேசினர்.

   மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தலை மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் நடத்தி வைத்தார் .

   தோழர்கள் P.மகாலிங்கம், M.பூமிநாதன் மற்றும் R.செழியன் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
   மாநாட்டில், அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக முதல் தவணையாக ரூபாய் பத்தாயிரமும்,  AIBDPA சார்பில் ரூபாய் ஓராயிரம் வழங்கப்பட்டது 
   புதிய மாவட்ட    செயலர் தோழர். M.பூமிநாதன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

மாநில  செயலர் கௌரவிக்கப்படுகிறார்

மாநில  செயலர் சிறப்புரை ஆற்றினார். 

DGM(CFA) Sri. SRIDHAR

மாநாட்டில்  கலந்து  கொண்டோர்



  

Monday 12 September 2016