தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 7 August 2014


Wednesday 6 August 2014

செய்திகள் சில . . .

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சலுகை
2.5 கோடி சொத்து மதிப்பு மட்டுமே உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு
12847 கோடி மதிப்புள்ள பிராட்பேண்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக
சிஏஜி தணிக்கை செய்வதற்கு முனைந்துள்ளது.
ஆனால், DoT இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான
முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ.
பெருமுதலாளிகளின் சேவகனாக அரசுகள் செயல்படுவதின் தொடர்ச்சியே இது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை
பொதுத்துறை நிறுவன்ங்களின் பங்கு விற்பனையில்
அசுர வேகம் காட்டுகிறது, புதிய அரசு. 
HAL, RINL நிறுவனங்களின் 10% பங்குகளையும்
SAIL நிறுவனத்தின் 5% பங்குகளையும்
TCI நிறுவனத்தை ஒட்டு மொத்தமாகவும்
விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவுகளை நிதிஅமைச்சர் திரு. அருண் ஜேட்லி
பாரளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக அரசுக்கு ரூ.35792 கோடி வருமானம்
கடந்த மூன்று ஆண்டுகளில், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து
அரசுக்கு ரூ.35792 கோடி வருமானமாக வந்துள்ளது என்று
பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் BSNL மற்றும் MTNL செலுத்திய தொகையும் அடங்கும்.

தொலைத்தொடர்பு நிதி நிறுவனம்
தொலைத்தொடர்பு நிதி நிதி நிறுவனம் ஒன்றை
நிர்மாணிக்கப் போவதாக பாரளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
DoTன் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய
ஒரு பொதுத் துறை நிறுவனமாக இது இருக்கும்.
தொலைத்தொடர்பு விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான
நிதி உதவிகளைச் செய்வதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் சேவை தனியார் நிறுவனங்களுக்கே போய்ச் சேரும்
என்பதை நம்மால் அறிய முடிகிறது.