தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 24 November 2014


பொதுத்துறையை சூறையாடத் 

திட்டம்


புதுதில்லி, நவ. 23-
இரண்டாம் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களாக பொதுத்துறை மேலும் பெரிய அளவில் திறந்துவிடப்படும், காப்பீடு மற்றும் நிலச்சட்டங்கள் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தில்லியில் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடம் அருண் ஜெட்லி பேசியபோது கூறியதாவது:நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எப்போதும் தடை படக்கூடாது என்பதில் பாஜக அரசு தெளிவுடன் இருக்கிறது. இதற்காக இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப்படும். இரண்டாம் கட்டபொருளாதாரச் சீர்திருத்தங்க ளாக நாட்டின் பொதுத்துறைகள் இன்னும் பெரியதாக திறந்து விடப்பட வேண்டும்.
காப்பீடு,ரயில்வேத்துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் அந்நிய முதலீடுகள் தாராளமாக வரவேற்கப் படுகின்றன. இவ்வளவு பெரியஅளவில் திறந்துவிடப்படும்போது தொழில் தொடங்க தடையாக நிலம் கையகப்படுத்துதல் சட்டடங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருக்கக்கூடாது. கார்ப்பரேட்டுகள் தொழில் தொடங்கவும் பல்வேறு கம்பெனிகள் தொழிற்சாலை தொடங்கவும் தடையாக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவது குறித்த சட்டம்வரிச்சட்டம், காப்பீடு சட்டம் போன்றவை உள்ளன. இவை வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காலாவதியாகிப்போன சட்டங்கள் என்பதால் இவை ஒவ்வொன் றாக நீக்கப்பட வேண்டும் என்றார். முதலீட்டாளர்கள் இங்கு தொழில் தொடங்க நிலையான அரசியல், கொள்கை மற்றும் வரி விதிப்பு முறை இருக்க வேண்டும்இங்கு அப்படி இல்லாத நிலையைவிரைவில் மாற்றுவோம். பொதுத் துறையை பெரிய அளவில் திறந்துவிட்டு முதலீடுகள் மலிவாக இல்லாவிட்டால் எந்தப் பயனும்இல்லை. பட்ஜெட் போட்டுத் தான் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. பட்ஜெட் என்பது ஒரு வாய்ப்புதான். நிலம் கையகப்படுத்தப்படும் போது அதிக அளவில் நட்ட ஈடுஅளிப்பது பிரச்சனையில்லை. ஆனால் நிலம் கையகப்படுத்த வில்லை எனில் கட்டுமானம், நகரங்கள், வீடுகள் கட்டுவது மற்றும் வேலை வாய்ப்புகள் போன்றவை பிரச்சனையாகி விடும்.
சிலிண்டர்களுக்கான மானியங்கள் அளிப்பதைப் பொறுத்தவரை இரு நாட்களுக்கு முன்னதாக கூறியதையே உறுதிப்படுத்து கிறேன். வசதியுள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் அளிப்பதை ரத்து செய்வதற்கு சில எதிர்ப்புகளை நாங்கள் எதிர்கொள்வோம் என்று எங்களுக்கு தெரியும்.பொது விநியோக முறையைரத்து செய்வதைப் பொறுத்த வரை இதற்காக பிமல் ஜெயின் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட செலவினங்கள் மேலாண்மை கமிஷன் இப்பிரச்சனையை ஆராய்ந்து வருகிறது. பொது விநியோக முறையில் வழங்கப்படும் உணவு, உரங்கள் மற்றும் எண்ணெய்க்காக அளிக்கப்படும் மானியங்களை குறைப்பதற்கும் இதனால் பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை சரி செய்யவும் அந்த கமிஷன் ஆராய்ந்து வருகிறது.
விரைவில் அந்த கமிஷனின் பரிந்துரையின்படி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். அருண் ஜெட்லி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகவும் உள்ளார்.
எப்.எம்.வானொலி
இத்துறையை விரிவுபடுத்து வது தொடர்பாக பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மத்திய அரசு800 எப்.எம்.வானொலி சேவை களுக்கு அனுமதி அளிக்கும் என்றுகூறியுள்ளார்.

No comments:

Post a Comment