தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 5 May 2014

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் அதிகரிப்பு

தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் 2013 அக்டோபர் - டிசம்பர் மாத காலத்தில் 10.46 சதவீதம் அதிகரித்து ரூ.58,385 கோடியாக உயர்ந்துள்ளது என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2012-ஆம் ஆண்டின் இதே காலத்தில் ரூ.52,858 கோடியாக இருந்தது. தொலைத் தொடர்பு சேவை தவிர்த்து ரியல் எஸ்டேட் மற்றும் இதர ஆதாரங்கள் வாயிலான வருவாயை மொத்த வருவாயில் கழித்தால் நிறுவனங்களின் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்) கிடைக்கும். இதன்படி, இத்துறை நிறுவனங்களின் மொத்த வருவாய் 14.62 சதவீதம் அதிகரித்து ரூ.39,575 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் மூலம் பெற்ற சராசரி வருவாய் ரூ.99-லிருந்து ரூ.116-ஆக உயர்ந்துள்ளது. நிறுவனங்களின் ஒட்டுமொத்த சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக பங்குடன் (ரூ.9,010 கோடி) முதலிடத்தில் உள்ளது. அடுத்து வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். டாட்டா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

No comments:

Post a Comment