தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 22 January 2014

மேலும் இரண்டு பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சர்குழு ஒப்புதல்



இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம் மற்றும் பால்கோ ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஏல முறையில் இந்த பங்குகள் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் வரைவருவாய்கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடுமையான நிதிப் பற்றாக்குறையில் தவித்து வரும் மத்திய அரசு, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பற்றாக்குறையை சமாளிக்க முயற்சித்து வருகிறது.