தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 1 July 2014

செய்தித் துளிகள் . . .

01.07.2014 முதலான பஞ்சப்படி 2.9% உயர்ந்து மொத்தம் 91.3% ஆகியுள்ளது.

BSNL- MTNL இணைப்பு பற்றி தீவிர பரிசீலனையில் இருக்கும் அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு ஃபோரம் கடிதம் எழுதியுள்ளது. இணைப்பு பற்றிய இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தீர்க்கப்பட வேண்டிய நிறுவன கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் மனித வளப் பிரச்சனைகளும் இருப்பதால் அவை பற்றி விவாதிக்க விரைவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரப்பட்டுள்ளது.

திரு. R.K. உபாத்யாய் பணி ஓய்வு பெற்றார். அவர் இடத்தில் திரு. A.N.RAI, புதிய CMD ஆக 3 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஓய்வூதியர்களுக்கு 78.2% பலனை உடனடியாக வழங்கக் கோரி நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்களுக்கு AIBDPA, 30.06.2014 அன்று கடிதம் எழுதியுள்ளது.

விடுபட்ட தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம், குறைந்த பட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம், EPF, ESI முறையாகக் கட்டப்படுவதைக் கண்காணித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் நல அமைச்சர் திரு. நரேந்திரசிங் தோமர் அவர்களுக்கு BSNL தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் சம்மேளனம் (BSNLCCWF) கடிதம் எழுதி உள்ளது.

No comments:

Post a Comment